வியாழன், 7 ஜனவரி, 2016

சர்வதேச துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா உலக சாதனைசுவிஸ் கோப்பை

வெள்ளி, 30 மே, 2014


சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 115–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் விஜயராமகிருஷ்ணா, அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே

இந்திய தேர்தல் ஒரு நீண்ட ஆய்வு




ந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆகஸ்ட் 1947-இல் அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற கொள்கையின் அடிப் படையில் பொதுத் தேர்தல் நடத்தி, அதன் மூலமாக மக்களின் முழு பிரதிநிதித்துவம் பெற்ற அரசு ஒன்றை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அரசியல் சாசனத்தின் சட்டப் பிரிவுக்கூறு எண் 324-ன்படி தே

வெள்ளி, 16 மே, 2014

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு. பிரித்தானியாவில் மே 18 மாலை 4:00 மணி தொடக்கம் இரவு 8:00 மணி வரை ரவல்கர் சதுர்க்கத்தில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

கே :தொடர் தோல்விகள், உங்களை மனரீதியாகப் பலவீனம் அடையச் செய்துள்ளதா?'
ப: ''போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான். இடையறாது

நரேந்திர மோடி-ஒரு சிறப்பாய்வு 

சரித்திர வெற்றி பெற்று உலக தலைவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் 15வது பிரதமர் பதவியை அலங்கரிக்க போகிறார்.
நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே, எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கூறியது மட்டுமல்லாமல், 
தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பல முக்கிய வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பல முக்கிய கட்சியை சேர்ந்த பிரபல வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

அவர்களின் பெயர் மற்றும் தொகுதி விவரம் பின் வருமாறு:
1. வைகோ (விருதுநகர் தொகுதி)
2. திருமாவளவன் (சிதம்பரம் தொகுதி)
3. தயாநிதி மாறன் (மத்திய சென்னை தொகுதி)
4. டாக்டர் கிருஷ்ணசாமி ( தென்காசி தொகுதி)
5. ஆ. ராசா (நீலகிரி தொகுதி)
6. எல்.கே.சுதீஷ் (சேலம் தொகுதி)
7. காரத்திக் சிதம்பரம் ( சிவகங்கை தொகுதி)
8. எச்.ராஜா (சிவகங்கை தொகுதி)
9. திருநாவுக்கரசர் (இராமநாதபுரம் தொகுதி)
10. மணிசங்கர் ஐயர் (மயிலாடுதுறை தொகுதி)
11. ஈவிகேஎஸ். இளங்கோவன் (திருப்பூர் தொகுதி)
12. இல.கணேசன் ( தென் சென்னை தொகுதி)
13. டி.ஆர். பாலு ( தஞ்சாவூர் தொகுதி)
14. பாரி வேந்தர் ( பெரம்பலூர் தொகுதி).
ஆலந்தூர் இடைத்தேர்தல்: அதிமுக வெற்றி
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெட்கட்ராமன் வெற்றி பெற்றார். 

டெல்லி தேர்தல் முடிவு வருத்தம் அளிக்கிறது, தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் உள்ள 7 பாராளுமன்றத் தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

20 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் காங்கிரஸ் பூஜ்ஜியம்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
அவை வருமாறு:–
தமிழ்நாடு, கோவா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி, இமாச்சலபிரதேசம், ஜம்மு–காஷ்மீர், சிக்கிம், திரிபுரா, நாகலாந்து, ஆந்திரா, லட்சத்தீவு, சண்டிகார், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ, தத்ராநகர் ஹவேலி.


பாஜக, காங்கிரஸ், அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ் பெற்ற தொகுதிகள் விபரம்
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.
பாஜக 270

காங்கிரஸ் கட்சி 42

அதிமுக 37

திரிணாமூல் காங்கிரஸ் 34

சிவசேனா 16

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8

பீஜு ஜனதா தளம் 7

சனி, 10 மே, 2014

60 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் சாதனை: வதோதராவில் மோடி பேச்சு
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 
நோட்டாவிற்கு பதிவான வாக்குகள்: தமிழகத்தில் நீலகிரி முதலிடம்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
 காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தேர்தலில் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரலாறு காணாத மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். 
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொள்கை அடிப்படையில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.

மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறிய சோனியா, புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வியடைந்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இதில், என்.ஆர்.காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் 60,854 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி தோற்கடித்து, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்கிரஸ்) & 2,55,826
நாராயணசாமி (காங்கிரஸ்) & 1,94,972
ஓமலிங்கம் (அ.தி.மு.க.) & 1,32,657
நாஜிம் (தி.மு.க.) & 60,580
அனந்தராமன் (பா.ம.க.) & 22,754

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 12 ஆயிரம் வாக்குகள் பெற்று 4 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கார்த்தி சிதம்பரம் 11,958 வாக்குகள் பெற்று 4 இடத்தில் உள்ளார்.

47,440 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. முதல் இடத்திலும், தி.மு.க. 23,902 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், பா.ஜ.க. 13,603 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.
திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டதாக அக்கட்சியின் தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மொத்தம் பதிவான வாக்குகளில் 6 ல் ஒரு பங்கை வாங்கினால்தான் டெபாசிட் கிடைக்கும். ஆனால் தற்போதைய நிலையே அனைத்து சுற்றுகளிலு

திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. கட்சியில் கருணாநிதியின் தலையீடு இல்லாததுதான் தி.மு.க.வின் தோல்விக்கு காரணம்.மு.க.அழகிரி 
மதுரையில் இருந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. கட்சியில் கருணாநிதியின் தலையீடு இல்லாததுதான் தி.மு.க.வின் தோல்விக்கு காரணம்.
தற்போது தி.மு.க. கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை. கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாகவே அவர் பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள் பல்வேறு சதி நடைபெற்றது. பணம் கொடுத்தவர்களுக்கு தான் சீட் வழங்கப்பட்டது. அப்போதே இதை நான் சுட்டிக்காட்டினேன். இருப்பினும், அப்போது நான் 5 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க.வில் உள்ள சர்வாதிகார போக்கும் இந்த தேர்தலில் தோல்விடைய ஒரு காரணமாகும். மேலும், தி.மு.க. மீதான எதிர்ப்பு, தி.மு.க. உட்கட்சி பிரச்னையால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது'' என்றார்.
மேலும் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதையும் குறைகூறிய மு.க. அழகிரி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அவருக்கு சீட் வழங்கி இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
ம் நீடித்தால் கார்த்திக் சிதம்பரம் தனது டெபாசிட்டையே இழக்க நேரிடும்.

நடிகை நக்மா தோல்வி அடைந்தார்.ரோஜா  முன்னணியில் 
மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை நக்மா வெறும் 13,222 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

தமிழகம்: தொகுதிவாரியாக முன்னணி வெற்றி நிலவரம்...

நீலகிரியில் 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
தமிழகத்தில் நீலகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,04940 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் - 4,63,700  வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா - 3,58,760 பெற்று தோல்வியுற்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் : வைகோ கருத்து


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும்

திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு கூறியுள்ளார். 
திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு
காரணம் என்ன?நடிகை குஷ்பு பதில்
 சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் வீட்டுக்கு நடிகை குஷ்பு காலை 10.30 மணியளவில் வந்தார். சுமார் 20 நிமிடம் வரை கலைஞர் இல்லத்தில் இருந்த குஷ்பு, 10.50 மணிக்கு வெளியே வந்தார்.
அப்போது அவரிடம், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.
ஜெயலலிதாவுகு ரஜினிகாந்த் வாழ்த்து


மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தேசிய அளவில் 3வது  இடத்திற்கு அதிமுக வந்துள்ளது.  இதற்காக நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த பரிசு - சீமான்
தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.

அகில இந்திய அளவில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகள்

அகில இந்திய அளவில் பாஜக 348, காங்கிரஸ் 68, அதிமுக 37, திரிணாமுல் காங்கிரஸ் 33, பிஜு ஜனதா தளம் 18, தெலுங்கு தேசம் 13, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
விருதுநகர்: அதிமுக முன்னிலை: 3வது இடத்தில் வைகோ

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 65,532 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ரத்தினவேலு 39,218 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 38,981 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 5 ஆயிரம் வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார். 

எல்.கே.அத்வானி 1,18,281 வாக்குகள் முன்னிலை
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதயில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட்டார். 11.30 மணி நிலவரப்படி அவர் 1,18,281 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
2 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ராகுல்காந்தி முன்னிலை
காங்கிரஸ் கட்சி 40,927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2,678 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.
2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். காலை 11.12 மணி நிலவரப்படி 21,425 வாக்குகள் பெற்று அவர் 2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி 19,246 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி 4,960 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 1,113 வாக்குகள் பெற்றுள்ளார்.

சிதம்பரம்: 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மதியம் 1.33 மணி நிலவரப்படி அதிமுக வேட்பாளர் சந்திரகாசி 1,47,743 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்

மக்கள் குரலே மகேசன் குரல் : தேர்தல் முடிவுகள் குறித்து கலைஞர்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து  திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது. 

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வைகோ தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 

 விருதுநகர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக வேட்பாளராக வைகோ போட்டியிட்டார். அதனால் இத்தொகுதி வி.ஐ.பி
களைகட்டியது அ.தி.மு.க அலுவலகம், களையிழந்தது அறிவாலயம்! (படங்கள்)நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில், தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெறிச்சோடி காணப்பட்டது.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
மேலும், ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனிலும் தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தொண்டர்கள் வெளிப்படுத்தினர்.
சில தொண்டர்கள் மொட்டையடித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
 
அதே நேரத்தில்  புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 35 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறவில்லை. மாறாக படுதோல்வியை சந்தித்துள்ளது. படுதோல்வியை சந்தித்துள்ள தி.மு.க., அதன் அலுவலகமான அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சந்திரபாபுநாயுடு மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடை பெற்றது.
சீமாந்திராவில் 25 பாராளுமன்ற தொகுதியும், 175 சட்டசபை தொகுதியும் உள்ளது. இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

தமிழகம் கட்சி - முன்னணி/வெற்றி நிலவரம்..
அ.தி.மு.க.37
தி.மு.க.0
ம.தி.மு.க.0
தே.மு.தி.க.0
பா.ம.க.0
பா.ஜ.க.2
வி.சி0
சி.பி.ஐ.0
சி.பி.ஐ.(எம்).0




இந்தியா -முன்னணி/வெற்றி நிலவரம்
பா.ஜ.க. கூட்டணி333
காங்கிரஸ் கூட்டணி66
மற்றவை144