திங்கள், 14 ஏப்ரல், 2014

சசிகலா பெயரில் பணமோசடி : தூத்துக்குடியைச்சேர்ந்தவர் கைது!
தூத்துக்குடியை சேர்ந்தவர் விஜயகுமார் (52). மனைவியை பிரிந்துள்ளார். இவர் தனக்கு வேண்டிய வர்களிடம் என் மனைவி, சசிகலாவுக்கு நெருங்கிய சொந்தம். எனவே உங்களுக்கு
அரசு வேலை, டெண்டர், துறை முகத்தில் பணி வாங்கிக் கொடுக்க முடியும். சசிகலா எனக்கு எல்லா உதவிகளையும் செய்வார் என்று கூறியுள்ளார்.

பணம் வாங்கும் போது  எதிரில் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக போனில் சசிகலா விடம் பேசுவதை போல் பாவனை செய்வார்.  இதை நம்பிய சிலர் சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங் களை சேர்ந்தவர்கள் பணத்தை கோடி கோடி யாக அளித்துள்ளனர். கடந்த 5 ஆண்டாக இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
விஜயகுமாரால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஜெயலலி தாவின் தோழி பெயரை சொல்லி மோசடி நடந்துள்ளதால் இந்த வழக்கை ரகசியமாக விசாரணை நடத்த கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.


அதன்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், மேற்பார்வையில்  தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசார ணையில் விஜயகுமார் சிக்கினார். அப்போது அவர் சசிகலா பெயரை சொல்லி பணம் மோசடி செய்ததை ஒப்புக் கொண் டார். எனவே போலீசார் அவரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக