திங்கள், 14 ஏப்ரல், 2014

    ஆ.ராசாவால் காங்கிரஸ் கட்சிக்கு அவமானம்: சுதர்சனநாச்சியப்பன் உதகையில் பேட்டி

காங்கிரஸ் கட்சியை சேர்த மத்திய இணையமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் இன்று உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- 2 ஜி. ஸ்பெட்ரம் ஒதுக்கீடில் முறைகேட்டுக்கு காரணமான ஆ.ராசாவால் காங்கிரஸ் கட்சிக்கே அவமானம். ஆ.ராசா நீலகிரியில் வெற்றிபெற்றாலும் விரைவில் சிறைக்கு செல்வார். இதனால் மீண்டும் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரும். இடைதேர்தலை தவிர்க்க அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். என கூறினார்.
மேலும் இலங்கை தமிழர் பிரச்சனை என்பது முடிந்து விட்ட ஒன்று இந்த தேர்தலில் தமிழகத்தில் இப்பிரச்சனை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாட்டில் மோடி அலை வீசுவது என்பதில் உண்மையில்லை.
தமிழகத்தில் மோடிக்கு ஆதரவை உருவாக்கவே ரஜினிகாந்தை அவர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம் தமிழ் நாட்டில் மோடி அலையை ஏற்படுத்த முயல்கின்றனர். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக