திங்கள், 14 ஏப்ரல், 2014

போயஸ்கார்டனில் வைகோ :
ரஜினியுடன் சந்திப்பு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பிரச்சாரத்திற்காக நேற்று சென்னை வந்தார்.   அவர், போயஸ்கார்டன் சென்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பாஜக மத்தியில் இது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த வாரம் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த செய்தி வெளிவந்துள்ளது.
2014 ஏப்ரல் 6 அன்று  வைகோ,  சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களது இல்லம் சென்றார். அப்போது சுப்பர் Þடார் ரஜினிகாந்த் , வைகோவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பகல் 12.30 மணி அளவில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது, நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு ராம்ஜெத்மலானி வேண்டிக்கொண்டு தனது கைப்பட எழுதிய வேண்டுகோள் இடம்பெற்ற சுயசரியதை நூலை வைகோ ரஜினியிடம் கொடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக