திங்கள், 14 ஏப்ரல், 2014

மதுரை திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கமாட்டேன் : அழகிரி

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவில் நிலைமை மாறும்; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்வார்கள், உள்ளே இருப்பவர்கள் வெளியே வருவார்கள் என  கூறினார்.



நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற தனது ஆதரவாளர் கபிலன் இல்ல காதணி விழாவில் மு.க.அழகிரி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர்,   ‘’மதுரையில் திமுக வேட்பாளராக நிற்பவர், அழகிரி ஆதரவு அளித்தால் வெற்றி பெறு வேன் என்று கூறியுள்ளார்.  ஆனால், அவர் இதுவரை என்னை வந்து சந்திக்கவில்லை. இனி அவருக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை.
மதுரையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு கலைஞர் வருகிறார். அவர், ஒருவேளை என்னை வந்து சந்தித்தால் அவரையும் கட்சியில் இருந்து நீக்கிவிடக்கூடும் என்பதற்காகத்தான் நான் நாகர்கோவில் வந்துவிட்டேன்’’ என்றார் அழகிரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக