வியாழன், 20 மார்ச், 2014

காந்தி நகரில் போட்டியிடஅத்வானி சம்மதம்

 காந்தி நகர் தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அத்வானி, மத்திய பிரதேசத்தில் உள்ள போபால்
தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறியிருந்தார். ஆனால், நேற்று வெளியிடப்பட்ட பா.ஜ.க. வேட்பாளர்களின் 5வது பட்டியலில், அத்வானிக்கு குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், பா.ஜ.க. மூத்த தலைவரான அத்வானி அதிருப்தி அடைந்தார். 

இதையடுத்து, பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து, சமாதானப்படுத்தினர். இதற்கிடையே, இன்று சென்னை வந்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், அத்வானி எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறாரோ அந்த தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறினார். 

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர்களின் சமாதானத்தைத் தொடர்ந்து, காந்திநகர் தொகுதியில் போட்டியிட அத்வானி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக